நீதிமன்றத்தின் நோட்டீஸ் கிடைத்தவுடன் சனாதனம் குறித்த பேச்சுக்கு விளக்கம் அளிக்கப்படும் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி

0 1071

சனாதனம் குறித்த பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதுகுறித்து நோட்டீஸை பெற்ற பிறகு தகுந்த விளக்கம் அளிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புளியந்தோப்பு கே.பி. பார்க் குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட கால்பந்து மைதானத்தை திறந்து வைத்த , பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர், திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இணைவது குறித்து, தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

முன்னதாக, சென்னை புதுப்பேட்டை கொய்யாதோப்பு பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 324 புதிய  அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments