சனாதான விவகாரம்: உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வோம் - அமைச்சர் சேகர்பாபு

0 2460

சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஒரே நாளில் 6 வைணவ ஆலயங்களை தரிசனம் செய்யும் வகையிலான ஆன்மீக சுற்றுலா பயணம் இன்று தொடங்கப்பட்டது.

சுற்றுலா திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று 62 பேர் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், அவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் தொடர்பான பேச்சு தொடர்பாக உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், சட்டப்படி எதிர்கொள்வோம் எனக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments