உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் - முதலமைச்சர்

0 1585

உடல் உறுப்புகளை தானமாக அளித்து பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றும் வகையில், இறக்கும் முன்பு உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உடல் உறுப்ப தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வழிக்கும் அரும்பணியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்குவதாக எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments