நெல்லையில் ஏடிஎம்-களில் திருடியதாக கைதாகி தப்பிய 2 பேர் மீண்டும் கைது

0 1320

திருநெல்வேலியில் ஏடிஎம்களில் திருடியதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றபோது தப்பி ஓடிய ஹரியானா மாநில தொழிலாளர்கள் இரண்டு பேரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று பகல் வந்த இரண்டு பேரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்து காவலாளி அளித்த தகவலின் பேரில் வங்கி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

கைதான உசேன், முபட் ஆகிய இருவரும், ஏற்கனவே இதே பகுதியில் இருந்த வேறு ஒரு ஏடிஎம்மில் பணத்தை திருடியதும், நேற்று மீண்டும் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய சலீமை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அருகேயும், முபட்டை சாந்தி நகரிலும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments