திமுக ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய ஊழல் - அண்ணாமலை விமர்சனம்

0 2635

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு ஊழல் புகார் எழுப்பப்படுவதால், அமைச்சர்கள் அச்சத்தில் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

என் மண் என் மக்கள் யாத்திரையின் ஒரு பகுதியாக காங்கேயம் சென்ற அவருக்கு பா.ஜ.கவினர் வரவேற்பு அளித்தனர். நடை பயணத்தின் ஒரு இடத்தில் காளை மாடுகளுடன் நின்ற விவசாயியை சந்தித்த அண்ணாமலை, மாடுகளுக்கு மாலை அணிவித்தார்.

யாத்திரைக்கு இடையே பேசிய அண்ணாமலை, தேங்காய் பருப்பு மற்றும் எண்ணெய்க்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி உள்ள போது ஒரு சதவீதம் செஸ் வரி விதிப்பது விசித்திரமானது என்றும் இதனை கண்டித்து பாஜக போராட்டம் நடத்தும் என்றும் கூறினார்.

நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு அமைத்து தருவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக, இதுவரை ஒரு செங்கல்லை கூட வைக்கவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments