சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி மின்சாரப் பேருந்து

0 1431

சென்னை அருகே, பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பாப்பான்சத்திரம் பகுதியில் எலக்ட்ரிக் ஆம்னி பேருந்து மீது பின்னால் வந்த மற்றொரு ஆம்னி பேருந்து வேகமாக மோதியதில் தீப்பிடித்து எரிந்து முழுவதுமாக சேதமடைந்தது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்ட நிலையில், பயணிகள் மற்றும் ஓட்டுநர் உடனடியாக வெளியேறியதையடுத்து உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. கரும்புகையுடன் கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

எலக்ட்ரிக் பேருந்தின், பேட்டரி பின்பகுதியில் இருந்ததால், மற்றொரு ஆம்னி பேருந்து மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments