மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.... அவையில் இருந்த 215 உறுப்பினர்களும் மசோதாவை ஆதரித்து வாக்களிப்பு

0 824

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் 215 உறுப்பினர்களின் ஒட்டு மொத்த ஆதரவுடன் நிறைவேறியது. எம்பிக்கள் மேஜைகளைத் தட்டி ஆரவாரம் செய்து, மோடி வாழ்க என்று முழக்கமிட்டனர்.

இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்று மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கார் தெரிவித்தார். மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து மாநிலங்களவையின் சிறப்புக் கூட்டத் தொடர் நிறைவு பெற்றது.

மாநிலங்களவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே ஒருமனதாக மசோதாவை நிறைவேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்ற வளாகத்திலும் பெண் எம்பிக்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments