நெல்லை - சென்னை இடையே தென்தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை... வரும் 24 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைப்பார்

0 1967

நெல்லை - சென்னை இடையே தென்தமிழகத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை வரும் 24 ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

நெல்லை ரயில் நிலையத்தில் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் இதனை தெரிவித்தார்.

சென்னை-கோவை மற்றும் சென்னை- மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடர்ந்து தமிழகத்திற்கு மூன்றாவது வந்தே பாரத் ரயில் நெல்லை- சென்னை இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. விருதுநகர், மதுரை திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments