அண்ணாவை பற்றிய விமர்சனம் தி.மு.க.விற்கு -முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாபம்

0 1867

சாதாரண கூட்டத்திற்கு வந்திருக்கின்றோம் என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது உலகத்தில் ஏழாவது இடத்தில் அதிமுக இருந்து வருகிறதுஎன மதுரை விளாங்குடியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

இந்திய துணை கண்டத்தில் மூன்றாவது பெரிய இயக்கம் அதிமுக தமிழகத்தில் முதன்மையான ஒரு கட்சி என்றால் அது அதிமுக தான் அதிமுகவிற்கு மிஞ்சிய எந்த கட்சியும் இல்லை.

அண்ணாவைப் பற்றி இழிவாக பேசுபவரை தட்டிக்கேட்டால் அமலாக்கத்துறை வந்துவிடும் என்ற பயத்தில் மௌனம் காக்கிறீர்களே நீங்கள் எல்லோரும் நாசமாக போவீர்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சாபம் விட்டார்.

நான் பிறப்பதற்கு முன்பாக நீங்கள் எல்லாம் பிறப்பதற்கு முன்பாக இந்த நாட்டிலே ஒரு தெருவில் நடக்க முடியாது நடந்தால் தீட்டு பேசினால் தொட்டால் தீட்டு., பட்டால் பாவம் என்று இருந்த நிலையை மாற்றிய இரண்டு பேரும் தலைவர்கள் நம்முடைய பேரறிஞர் அண்ணாவும் தந்தை பெரியாரும் கருத்து வேறுபாடால் தான் திராவிட முன்னேற்ற கழகத்தொடங்கினார் அண்ணா.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments