சென்னையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடும் பணி தீவிரம்

0 1669

சென்னை அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வண்டலூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இன்று காலை அவர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து சென்ற இளைஞர் ஒருவர் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த மாணவியை மீட்டு அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்ற இளைஞர் தம்மை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவரது காதலை தாம் ஏற்க மறுத்ததால் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதாக சிகிச்சையில் உள்ள மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தனிப்படை அமைத்து இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments