கேரளா கூட்டுறவு வங்கியில் பல கோடி மோசடி... ரூ.40கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சி - அமலாக்கத்துறை தீவிர விசாரணை

0 1547

கேரள மாநிலம் கருவன்னூர் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக கொச்சி,திருச்சூர் உட்பட ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கருவன்னுர் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இவ்வங்கி மோசடி வழக்கில் முக்கிய பிரதியான சதீஷ்குமார் என்பவர் 40 கோடி ரூபாய் கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சித்தது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சதீஷ்குமார் பணம் டெபாசிட் செய்த பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் சோதனை நடைபெற்றது. எர்ணாகுளத்தில் கூட்ட நல்லூர்அறநாட்டு கரை, பெரியண்டூர், பாட்டுராய்க்கல் உள்ளிட்ட கூட்டுறவு வங்கியில் ED அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments