தமிழகம் மற்றும் காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது

0 2619

தமிழகம் மற்றும் காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

திருச்செந்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறுவர்கள் விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் சின்னத் தொண்டி கிராமத்தில் ரிஷப வாகனத்தில் விநாயகர் அமர்ந்தவாறு வடிவமைக்கப்பட்ட 8அடி உயரமுள்ள விநாயகர் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

கமுதி அருகே அபிராமம் ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் நவசக்தி விநாயகர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மின் ஒலி அலங்காரத் தேரில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புதுச்சேரி யூனியன் காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் உற்சவர் செல்வ விநாயகருக்கு மகா தீபாராதனையும்,வீதியுலா நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments