டெல்லி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் இன்று சிறப்புக் கூட்டத் தொடர் பகல் 1.15 மணிக்குத் தொடக்கம்.

0 1110

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் இன்று சிறப்புக் கூட்டத் தொடர் பகல் 1.15 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது.

மக்களவை மாநிலங்களவை ஆகியவற்றின் முதல் நாள் கூட்டுக் கூட்டத்தில் இன்று மூத்த உறுப்பினர்கள் என்ற முறையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் பாஜக எம்.பி. மேனகா காந்தி ஆகியோர் தலா 5 நிமிடங்களுக்கு வாழ்த்துரை நிகழ்த்த உள்ளனர்.

மேனகா மக்களவையின் மிகவும் மூத்த உறுப்பினராவார். இதேபோல் மன்மோகன்சிங் மாநிலங்களவையின் மிக மூத்த உறுப்பினராவார். சிபுசோரன் இரு அவைகளிலும் உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றி உள்ளார்.

இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கார், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments