மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. இந்தியில் அச்சிட்ட அழைப்பிதழைக் கிழித்து எறிந்தார் திருச்சி சிவா.. !!

0 1324

மத்திய அமைச்சரும் மக்களவைத் துணைத் தலைவருமான ராஜ்நாத்சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

5 நாட்களுக்கு நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த இக்கூட்டம் கூட்டப்பட்டது.

அப்போது திமுக எம்பி திருச்சி சிவா நாடாளுமன்ற வளாகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழ் இந்தியில் மட்டும் இருந்ததை சுட்டிக் காட்டி அதனைக் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடரின் 5 நாள் முழுமையான நிகழ்ச்சி அட்டவணை மற்றும் அஜெண்டாவை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மணிப்பூர் உள்ளிட்ட விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து மத்திய அரசு பேச மறுப்பதாக திமுக எம்பி கனிமொழி விமர்சித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments