ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் வெட்டி ஷூவை நக்க வைத்த ரௌடிகள்.. தப்பி ஓடிய போது பாலத்திலிருந்து கீழே விழுந்ததால் கை, கால்களில் மாவுக்கட்டு.. !!

0 2248

சென்னையில், ஆட்டோ டிரைவரை கத்தியால் வெட்டி விட்டு, தங்களது ஷூக்களை நாக்கால் நக்க வைத்த ரவுடிகள் 2 பேரை கைது செய்ய முயன்ற போது கீழே விழுந்ததால் கை, கால்களில் மாவுக் கட்டு போட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

தாம்பரத்தை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சேகர், அப்பகுதியில் உள்ள மெடிக்கலுக்கு சென்ற போது தங்கள் மீது இடித்தாகக் கூறி 2 பேர் அவரிடம் வம்பிழுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர், சேகரை தாக்கி, கத்தியால் கழுத்தில் வெட்டி விட்டு தங்கள் ஷூவை நக்க வைத்ததாக கூறப்படுகிறது.

அதோடு, தாங்கள் தான் இனிமேல் ரவுடிகள் என்றுக் கூறி அங்கிருந்தவர்களை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. காயமடைந்த சேகருக்கு 16 தையல்கள் போடப்பட்டன.

வழக்கு பதிவு செய்த மணிமங்கலம் போலீஸார், சி.சி.டி.வி பதிவுகளை கைப்பற்றி நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் கரசங்கால் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான கோபி என்ற கோபிநாத், விக்கி என்ற விக்னேஷ் என்பது தெரிய வந்தது.

இருவரும் அங்குள்ள ஏரிப் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அங்குச் சென்ற போது தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அப்போது, பாலத்திலிருந்து கீழே குதித்ததில் இருவரது கால் மற்றும் கைகள் முறிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments