திருவாரூர் தியாகராஜர் கோயில் குளக்கரையில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட இளைஞர்.. கஞ்சா போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை

0 1152

திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான கமலாலய குளக்கரையில் கஞ்சா போதையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறில் இளைஞன் ஒருவர் தனது நண்பனை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தான்.

அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக், மணிகண்டன், சதீஷ் ஆகிய மூன்று பேர் குளக்கரையில் அமர்ந்து கஞ்சா புகைத்ததாக கூறப்படுகிறது.

போதையில் கார்த்திக்குடன் தகராறு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து புறப்பட்டு விளமல் டாஸ்மாக் கடைக்கு வந்த சதீஷும் மணிகண்டனும் மது வாங்கி அருந்திவிட்டு, கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டு மீண்டும் குளக்கரைக்குச் சென்றனர்.

அங்கு தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கின் கழுத்தை அறுத்துக் கொன்ற மணிகண்டன், ரத்தம் தோய்ந்த கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டியவாறே, காவல் நிலையம் சென்று சரணடைந்தான். அவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments