இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகளுக்கு 1,591 புதிய வீடுகள்.. பயனாளிகளிடம் ஒப்படைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.. !!

0 817

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்காகப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 591 வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், அங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்து நேரில் பார்வையிட்டார்.

பின்னர் எஞ்சிய முகாம்களில் உள்ள வீடுகளை காணொளி மூலம் பயனாளிகளிடம் ஒப்படைத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments