நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் இன்று தேசியக் கொடியை ஏற்றுகிறார் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

0 1560

நாடாளுமன்றத்தின் புதிய கட்டட வளாகத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று  தேசியக் கொடி ஏற்றுகிறார்.

இந்த கட்டடத்தை கடந்த மே மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக்கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று புதிய கட்டடத்தில் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது.

ஹைதராபாத்தில் நடைபெறும் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments