ஆற்றில் மாட்டை குளிப்பாட்டிய விவசாயி முதலை கடித்து பலி

0 11719

கடலூர் மாவட்டத்தில், ஆற்றில் மாட்டை குளிப்பாட்டுவதற்காகச் சென்ற விவசாயியை முதலை கடித்துக் கொன்றது.

காட்டுக்கூடலூர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான சுந்தரமூர்த்தி, அப்பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்தார்.

அப்போது முதலை ஒன்று அவரது காலை கவ்விப்பிடித்து கடித்து ஆற்றுக்குள் இழுத்து சென்றது. அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் படகு மூலமாக ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டதால் வலை வீசி தேடிய நிலையில் சுந்தரமூர்த்தி சடலமாக மீட்கப்பட்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments