ராயப்பேட்டையில் உள்ள தனியார் மாலில் காட்சிப்படுத்தப்பட்ட கிரிக்கெட் உலகக்கோப்பை.. புகைப்படம், செல்ஃபி எடுக்க ரசிகர்களுக்கு அனுமதி

0 1394

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பை பொதுமக்கள் பார்வைக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மாலில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

ஐசிசி உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி அகமதாபாத்தில் துவங்க உள்ளது.

இந்தபோட்டிக்கான வெற்றிக் கோப்பை பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதன் ஒரு பகுதியாக சென்னைக்கு வந்துள்ளது. காட்சிப்படுத்தப்பட்ட கோப்பைக்கு அருகில் நின்று ஏராளமானோர் படம் எடுத்துக் கொண்டனர்.

உலகக்கோப்பை ஞாயிறன்றும் காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments