உண்மைக்குப் புறம்பான காரணங்களை கர்நாடகா கூறுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1436

தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய விநாடிக்கு 12,500 கன அடி காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி மத்திய ஜல் சக்தி அமைச்சரை தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்க இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 14-ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய 103 புள்ளி 5 டி.எம்.சியில் 38 புள்ளி 4 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமற்றது என்றும், தமிழ்நாடு தனது ஆயக்கட்டை அதிகப்படுத்தி உள்ளது என்றும் கர்நாடக அரசு கூறுவது ஆதாரமற்றது என்று  அவர் தெரிவித்துள்ளார். அத்தகைய உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ளக்கூடாது என வலியுறுத்தி அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் சென்று தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜல் சக்தி அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிப்பார் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments