பொன்னேரில் அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டதால் 3 மணி நேரம் காக்க வைத்து அறுவை சிகிச்சை செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்ட நோயாளி

0 1110

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி ஒருவர், மின்சாரம் தடைபட்டதால் 3 மணி நேர காத்திருப்புக்குப் பின் அறுவை சிகிச்சை செய்யாமலே திருப்பி அனுப்பப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சஞ்சய் என்ற அந்த நபருக்கு அறுவை சிகிச்சைக்காக 8 மயக்க ஊசிகள் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் தன்னை வார்டுக்கே திருப்பி அனுப்பி விட்டனர் என சஞ்சய் கூறினார்.

மருத்துவமனையில் ஜெனரேட்டர்கள் இருந்தும் உரிய பராமரிப்பு இல்லாததால் அவை இயங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments