குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்

0 2117

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் பலனடையும் வகையில், ஏ.டி.எம்.

கார்டுகளை வழங்கி அத்திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

பின்னர் பேசிய முதலமைச்சர், நிதிநிலை சரியில்லாத காரணத்தினாலேயே ஆட்சிக்கு வந்தவுடன் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றும் எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரம் முறியடிக்கும் வகையில் இன்று திட்டம் பயனாளிகளுக்கு உரிய முறையில் சென்றடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் இத்திட்டம், பெண்களின் வாழ்விற்கு உறுதுணையாக இருக்கும் என்றும், சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments