ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி... ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் திடீர் அறிவிப்பு

0 1742

ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் ஜனசேனா கட்சி கூட்டணி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை பவன் கல்யாண் சந்தித்துப் பேசினார்.

அதன் பின் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான நாரா லோகேஷுடன் செய்தியாளர்களிடம் பேசிய பவன் கல்யாண், தங்கள் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட விருப்பமுள்ள கட்சிகளையும் அரவணைத்து செல்வோம் என்றார்.

தற்சமயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பவன் கல்யாண், அந்தக் கூட்டணியில் இல்லாத சந்திரபாபு நாயுடுவின் கட்சியோடு கூட்டணி வைக்கவுள்ளதாகக் கூறியிருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments