ஹைதராபாத்தில், பிரியாணிக்கு கூடுதல் ரெய்தா கேட்டவர் ஹோட்டல் ஊழியர்களால் அடித்துக் கொலை.

0 3053

ஹைதராபாத்தில், பிரியாணிக்கு கூடுதல் ரெய்தா கேட்டு தகராறு செய்த நபர் ஹோட்டல் ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

புஞ்சகுட்டா பகுதியில் உள்ள மெரிடியன் என்ற ஹோட்டலுக்கு மொகம்மது லியாகத் என்பவர் தனது நண்பர்களுடன் மது போதையில் வந்து பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

பிரியாணிக்குக் கூடுதல் ரெய்தா கேட்டு ஊழியர்களிடம் அவர் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டதில் லியாகத் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, ஹோட்டல் மேலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையைத் தடுக்கத் தவறியதாக இரு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments