பல்வேறு மாநிலங்களில் வீடு புகுந்து ரூ.2.5 கோடி தங்க, வைர நகைகள் கொள்ளை அடித்த 4 பேர் கைது

0 2127

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த 4 கொள்ளையர்களை வாரங்கல் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் வீடு புகுந்து திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் மீது 32 வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கியும், கஞ்சா போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments