போபாலில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்

0 1624

இண்டியா கூட்டமைப்பைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் அடுத்த மாதம் போபாலில் ஒன்றாக பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தை கூட்ட தேதிகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.

டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் 14 உறுப்பினர்கள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் கட்சிகளுக்கு இடைய தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவில் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments