மாடு முட்டியதில் 3 மாத கர்ப்பிணி பெண்ணின் கர்ப்பம் கலைந்ததாக புகார்

0 1391

சென்னையில், தெருவில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் 3 மாத கர்ப்பிணியின் கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது.

அய்யப்பன்தாங்கல் பகுதியில் ஏராளமான மாடுகள் தெருக்களில் சுற்றி திரியும் நிலையில், பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு நடந்துச் சென்ற 31 வயது கர்ப்பிணியை ஒரு மாடு முட்டி தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த அந்த பெண் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேப்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராமகிருஷ்ணன் என்பவரையும், மற்றொரு பெண்ணையும் வெவ்வேறு மாடுகள் முட்டியதில் அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments