ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியின்போது போக்குவரத்து நெரிசலை சீர்செய்தல் குறித்து போலீசார் திட்டமிடவில்லை - இபிஎஸ்

0 2403

மதுரை அதிமுக மாநாட்டின் போது போக்குவரத்து நெரிசலை சீர் செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்த்தது போன்று, ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியின்போதும் நடைபெற்றதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசை நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த காவல்துறை, போக்குவரத்து நெரிசலை சீர்செய்தல் குறித்தும், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் குறித்தும் சரியாக முன்கூட்டியே திட்டமிடாததால், கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

இந்த போக்குவரத்து நெரிசலில், முதலமைச்சரின் வாகன அணிவகுப்பும் சிக்கிக் கொண்டதாக செய்திகள் வெளியானதாகவும், இது, தி.மு.க. அரசின் காவல்துறையினுடைய தோல்வியைக் காட்டுவதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இனியாவது காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments