ரஜோரியில் பாதுகாப்புப்படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாகிச்சண்டையில் தீவிரவாதி ஒருவன் பலி

0 1690

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

நர்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

மோதலில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்த நிலையில், பாதுகாப்பு படையினர் 3 பேர் காயமடைந்தனர். இந்த மோதலில் 6 வயதான கெண்ட் என்ற ராணுவ மோப்ப நாயும் பலியானது.

தனது பராமரிப்பாளரை நோக்கி வந்த துப்பாக்கிக் குண்டை தனது உடலில் வாங்கி அது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments