எகிப்தில் 34 நாடுகள் பங்கேற்கும் கூட்டு போர் ஒத்திகையில் இந்தியாவின் முப்படைகள் பங்கேற்பு..!

0 1550

எகிப்தில் 34 நாடுகள் பங்கேற்கும் பிரைட் ஸ்டார் போர் ஒத்திகைப் பயிற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் கலந்துக் கொண்டனர்.

இப்பயிற்சி செப்டம்பர் 14ம் தேதி நிறைவடைய உள்ளது. பயிற்சியின் ஒரு பகுதியாக ரபேல் மற்றும் மிக் 29 ரக விமானங்களுக்கு வானில் பறந்தபடியே இந்திய விமானப் படை விமானம் எரிபொருளை நிரப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது.

விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிப்பது போன்ற இதரப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன

இந்திய கடற்படையின் கப்பல் சுமேதா, எகிப்தின் அலெக்ஸாண்ட்ரா போர் ஒத்திகைக்காக துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 34 நாடுகளின் கூட்டுப் பயிற்சியில் இந்தியாவின் முப்படைகளும் பங்கேற்பது ஒருமுக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments