எகிப்தில் நடைபெற்றுவரும் ப்ரைட் ஸ்டார் கூட்டு போர் பயிற்சி... எகிப்து விமானத்திற்கு நடுவானில் எரிபொருள் நிரப்பிய இந்திய விமானம்

0 954

ஹாலிவுட் படங்களில் வரும் காட்சியைப் போல, எகிப்து விமானப்படை விமானத்திற்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பி ஒத்திகைப் பார்க்கப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பல்வேறு நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் பிரைட் ஸ்டார் கூட்டு போர் ஒத்திகை எகிப்தில் கடந்த 3-ம் தேதி கெய்ரோ விமானப்படை தளத்தில் தொடங்கியது.

வரும் 16-ம் தேதி வரை பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில், கெய்ரோ வான் பரப்பில் பறந்த எகிப்து விமானப் படையின் மிக்-29 மற்றும் ரஃபேல் விமானங்களுக்கு இந்திய விமானப்படையின் ஐ.எல்.78 ரக டேங்கர் விமானம் மூலம் எரிபொருள் நிரப்பப்பட்டது. 

எகிப்தில் நடைபெற்று வரும் இந்த ஒத்திகையில், இந்திய விமானப்படை சார்பில் மிக்-29 ரகத்தை சேர்ந்த 5 விமானங்களும், ஐ.எல்-78 ரகத்தை சேர்ந்த 2 எரிபொருள் நிரப்பு விமானங்களும், சி-130, சி-70 ரகங்களை சேர்ந்த தலா 2 விமானங்களும் பங்கேற்றுள்ளன.

இந்திய விமானப்படையின் கருடா சிறப்பு பிரிவு வீரர்களுடன் இந்திய ராணுவத்தை சேர்ந்த சுமார் 150 வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments