டீ குடிக்க வரும் வாடிக்கையாளரின் மன நிறைவை மணி அடித்து தெரிவிக்கும் வகையில் அதன் உரிமையாளர் ஏற்பாடு

0 2406

திருச்சியில் டீக்கடை உரிமையாளர் ஒருவர், வாடிக்கையாளர்களின் மனநிறைவை அறிந்து கொள்ளும் வகையில் தன்னுடைய கடை வசாலில் வெண்கல மணியை கட்டி வைத்துள்ளார்.

சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்படும் பாலு டீ ஸ்டாலின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன், தனது கடையில் டீ குடிக்கும் வாடிக்கையாளர்கள் நன்றாக இருந்ததற்கு, அடையாளமாக மணி அடிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்.

மணியை ஒலிக்காமல் செல்லும் நபர்களிடம் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் அவர், டீ நல்லா இருந்தா மணியை அடிங்க, இல்லையென்றால் டீயை போட்ட பாலசுப்பிரமணியனை அடிங்க என வேடிக்கையாக கூறுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments