சிறையில் உள்ள கைதியின் மனைவிக்கு வீடியோகாலில் பேசிய சிறை வார்டன் விஜயகாந்த் பணியிடை நீக்கம்

0 4510

சேலத்தில் சிறையில் உள்ள கைதியின் மனைவிக்கு வீடியோகாலில் ஆபாசமாகப் பேசிய சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்த சிவகுமார் என்பவர் திருட்டு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவக்குமாரைச் சந்திப்பதற்கு அவரது மனைவி முருகேஸ்வரி அடிக்கடி சிறைக்கு வந்து சென்ற போது வார்டன் விஜயகாந்துடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் முருகேஸ்வரியின் செல்போனுக்கு விஜயகாந்த் வீடியோகால் மூலம் பாலியல் ரீதியான பேச்சுகள் மூலம் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத்திடம், முருகேஸ்வரி புகார் செய்தார். இதையடுத்து விஜயகாந்தை பணியிடை நீக்கம் செய்து கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments