அருந்ததியர் மக்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

0 1087

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் மக்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜரான நிலையில், வரும் அக்டோபர் 10-ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி மாலதி உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், தான் பேசியது உண்மை என்றும் வாக்குகளுக்காக வார்த்தையை மாற்றி மாற்றி பேச மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments