தியாகி இமானுவேல் சேகரனின் 66 வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பரமக்குடியில் மரியாதை செலுத்தினர்.

0 831

தியாகி இமானுவேல் சேகரனின் 66 வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பரமக்குடியில் மரியாதை செலுத்தினர்.

காலை அவரது நினைவிடத்தில்  இமானுவேல் சேகரின் மகள் சூரிய சுந்தரி பிரபாராணி உள்ளிட்ட குடும்பத்தார்களும் அவர் பிறந்த ஊரான செல்லூர் கிராம மக்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கயல்விழி செல்வராஜ், பெரிய கருப்பன், ராஜகண்ணப்பன், மூர்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், ராஜலட்சுமி மணிகண்டன் உள்ளிட்டோர் இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments