கோயில் திருவிழாவில் முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர்கள் ஒருவரை ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொண்டனர்.

0 991

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொண்டனர்.

வடகால் கிராமத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன், மணிமாறன், விக்னேஷ், நேசமணி ஆகியோருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கடைவீதிக்கு வந்த நரேஷையும் அவரது நண்பர்களையும் எதிர் தரப்பினர் கம்பி மற்றும் மண்வெட்டியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இரு தரப்பிலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments