கபடிப் போட்டியில் மாவட்ட மற்றும் தேசிய அளவில் சாதிக்கும் மாணவிகள்... அரசு வேலையில் முக்கியத்துவம் வழங்கக் கோரிக்கை

0 1127

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கபடிப் போட்டிகளில் தேசிய அளவில் சாதனை படைத்து வரும் அரசுப் பள்ளி மாணவிகள், ஆண்களைப் போல் தங்களுக்கும் அரசுத் துறைகளில் சம வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தீவிரமான கபடிப் பயிற்சியை வழங்கி வருகிறார்.

மாணவிகளும் மாவட்ட மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள், கோப்பைகளை வென்று வருகின்றனர்.

கபடியில் சாதிக்கும் பெண்களுக்கு காவல்துறையில் மட்டுமே வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் ஆனால் ஆண்களைப் போல் அனைத்துத் துறைகளிலும் சம வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments