கர்நாடகா முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவேண்டும் - அன்புமணி

0 2167

காவிரியில் திறக்க வேண்டிய உரிய தண்ணீரை திறக்கக் கோரி கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டார்.

தருமபுரி மாவட்டம் கடத்தூரில் பேட்டி அளித்த அவர், காவிரி படுகையில் உள்ள அணைகளை காவிரி மேலாண்மை வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். அப்போதுதான் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்கும் என்று அன்புமணி தெரிவித்தார்.

மேட்டூர் அணையை ஆழப்படுத்தினால், கூடுதலாக 20 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்றும் வருங்காலங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படுவதை தடுக்க இது உதவிடும் என்றும் அன்புமணி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments