டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உலக தலைவர்கள்..!

0 2144

ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா வருகை தந்துள்ள உலக தலைவர்கள் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

டெல்லியில் காலை சாரல் மழை பெய்துகொண்டிருந்த போதும், அதனை பொருட்படுத்தாமல் தலைவர்கள் ராஜ்காட் வருகை தந்தனர்.

ராஜ்காட் வருகை வந்த தலைவர்களை கதர் சால்வை அணிவித்து பிரதமர் மோடி வரவேற்றார்.

மகாத்மா காந்திக்குப் பிடித்த பஜனை பாடல்களின் பின்னணியில் உலக தலைவர்கள் ஒன்றுகூடி நின்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதுடன், மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

தொடர்ந்து அங்குள்ள அமைதிச்சுவற்றில் தலைவர்கள் குறிப்புரை எழுதி கையொப்பமிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments