9 வந்தே பாரத் ரயில்களை விரைவில் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டம்...!

0 9833

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது 25 வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 9 ரயில்களை விரைவில் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக வந்தேபாரத் ரயில்கள் எதுவும் தொடங்கி வைக்கப்படவில்லை. சட்டமன்றத் தேர்தல்களை எதிர்நோக்கியுள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும், ஒடிசாவுக்கும் வந்தேபாரத் ரயில்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

அஸ்ஸாம் தவிர வடகிழக்கு மாநிலங்களுக்கும் தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் ரயில்களின் பிரேக் சிஸ்டம், கட்டுப்பாடு, கதவுகள் இயங்குமுறை, மின்சார பராமரிப்பு, கழிவறை தூய்மைப்பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு ரயில்வே ஊழியர்களுக்கு பயிற்சிகளை அளிக்க பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments