திடீரென கன்டெய்னர் லாரியை நிறுத்த முயன்ற ஓட்டுநரால் அடுத்தடுத்து கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து

0 2872
திடீரென கன்டெய்னர் லாரியை நிறுத்த முயன்ற ஓட்டுநரால் அடுத்தடுத்து கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை சூரியநாராயணன் கடற்கரை சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த கன்டெய்னர் லாரியை திடீரென பிரேக் போட்டு நிறுத்த முயன்றதால் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் நான்கு கார்கள் சேதமடைந்தன.

சென்னை துறைமுகத்திலிருந்து மீஞ்சூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் நின்றிருந்த ஜேசிபி வாகனம் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னால் சென்ற கார் மீது லாரி வேகமாக மோதியதில், அந்தக் காருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. தப்பி ஓடிய லாரி டிரைவர் தட்சிணாமூர்த்தி என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments