சுங்கக்கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிக ஆர்ப்பாட்டம்.. !!

0 1095

சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையை அடுத்த வானகரம் சுங்கச்சாவடியில் கட்சிப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டறைபெரும்புதூர் சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் போலீசாருக்கு பயந்து ஓட்டம் பிடித்தனர்.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுத்து கைது செய்ய முயன்றபோது, அவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம் விலக்கு சுங்கச்சாவடி முன்பாக திரண்ட தேமுதிகவினர் கட்டண உயர்வை நீக்கக் கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments