காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கல்லூரி மாணவர்களிடையே எற்பட்ட மோதல் - 7 பேர் கைது

0 1013

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வண்ணாரப்பேட்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்களிடையே எற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டில் பயிலும் முரளி கிருஷ்ணா, தருண் என்ற இரு மாணவர்களிடையே வகுப்பறையில் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இருவருடன் காசிமேடு துறைமுகத்துக்கு முரளி கிருஷ்ணா சென்றிருந்தார்.

அவர்களை பின் தொடர்ந்து வந்ததாகக் கூறப்படும் தருண் மற்றும் அவரது நண்பர்கள், முரளி கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேரை சராரியாக தாக்கியதாக தெரிகிறது.

அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முரளி கிருஷ்ணா முயன்ற போது பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானார்.

அவருடன் இருந்த தேசப்பன் என்ற முன்னாள் மாணவர் தலையில் கத்தியால் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தருண் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் 7 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments