ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மனைவி அக்ஷிதா மூர்த்தியுடன் இந்தியா வந்தார் பிரட்டன் பிரதமர் சுனக்.. பாரம்ரிய நடன நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு.. !!

0 1288

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர்.

லண்டனில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்த பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷிதா மூர்த்தியை மத்திய அமைச்சர் அஷ்வினி செளபே, இந்தியாவுக்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் மற்றும் மூத்த தூதரர்கள் வரவேற்றனர்.

தலைவர்களை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சிகளை அவர்கள் கண்டு ரசித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அண்டோனியோ கட்ரஸ், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ரோவ், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஓமன் பிரதமர் மற்றும் சுல்தான் ஹைதம் பின் தாரிக், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் உள்ளிட்டோரும் இந்தியா வந்தடைந்தனர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments