விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில், மர்மமான முறையில் கார் டிக்கியில் ஒருவர் எரித்துப் படுகொலை... போலீசார் விசாரணை!

0 1903

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கார் டிக்கியில் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காட்டுப்பகுதியில் நேற்று மாலை, கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நெருப்பை அணைத்துவிட்டு பார்த்த போது காரின் டிக்கியில் அடையாளம் காணமுடியாத அளவிற்கு எரிந்த நிலையில் சடலம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் அணிந்திருந்த ஆபரணங்களை வைத்து இறந்தவர் ஆண் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

மேலும் காரின் பதிவெண்ணை வைத்து, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த நாகஜோதி என்பவர் காரின் உரிமையாளர் என்பதைக் கண்டறிந்த போலீசார் அதுகுறித்து விசாரணை செய்தனர். அப்போது, நாகஜோதி மாயமானதாக ஏற்கனவே சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தது.

எனவே கொலை செய்யப்பட்டது நாகஜோதி என்பதை உறுதி செய்துள்ள போலீசார் கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளி குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments