16 வயது சிறுமிக்கு ரகசியமாக கருக்கலைப்பு செய்ய முயற்சி... கிளாம்பாடி பெண் பேரூராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேர் கைது

0 4110

ஈரோடு மாவட்டம் கிளாம்பாடியில் 16 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்றதாக கூறப்படும் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த பெண் பேரூராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கருமாண்டம்பாளையம் பகுதியில் அரசு பள்ளியில் படித்த 17 வயது சிறுவனுடன் நெருங்கி பழகியதால் கர்ப்படைந்த சிறுமிக்கு, சிறுவனின் உறவினரான கிளாம்பாடி பேரூராட்சி தலைவர் அமுதாள் உதவியுடன் கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரகசியமாக கருக்கலைப்பு செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பற்றி குழந்தைகள் நல அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மலையம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பேரூராட்சி தலைவர் அமுதாள் மற்றும் சிறுவனின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவாகியுள்ள சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments