சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகை விஜயலட்சுமியிடம் 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனை

0 10991

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்மை 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாக புகார் தெரிவித்த நடிகைக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீமான் ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை புகாரளித்ததன் அடிப்படையில், 2 நாட்களாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர், திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் மேஜிஸ்ட்ரேட்டிடம் அவர் வாக்குமூலம் அளித்தார். இவற்றைத் தொடர்ந்து, கருக்கலைப்பு புகார் தொடர்பாக நடிகையிடம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

மகப்பேறு கருப்பை சிகிச்சை மருத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்ட நடிகைக்கு, அல்ட்ரா சவுண்ட் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கருக்கலைப்பு செய்யப்பட்டது உறுதியானால், அதனை செய்த மருத்துவர்கள் யார்? என கண்டறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தவும், கருக்கலைப்பின் போது யாரது கையெழுத்து உள்ளது? என ஆராயவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments