படுகர் இன இளம்பெண் தனியார் விமானியாக தேர்வு... தென்னாப்பிரிக்காவில் விமானம் ஓட்டுவதற்காக பயிற்சி பெற்றார்

0 30904

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த படுகர் இன பெண் ஒருவர் விமானியாக தேர்வாகி உள்ளார். கோத்தகிரி அருகிலுள்ள நெடுகுளா குருக்கத்தியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.வான மணி-மீரா தம்பதியரின் மகள் ஜெயஸ்ரீ, தனியார் விமானத்தை இயக்கும் விமானி சான்றிதழை பெற்றுள்ளார்.

எம்.இ பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் ஐ.டி நிறுவனத்தில் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு, தனக்குப் பிடித்த வேலையான விமானம் ஓட்டுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்று பயிற்சி எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

ஆசையை நிறைவேற்ற தீர்மானித்து விட்டீர்கள் என்றால் அதற்கு நேரம் காலம் எல்லாம் பார்க்க வேண்டாம், வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு அதனை செயல்படுத்த வேண்டும் என ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments