பல்லடம் அருகே 4 பேர் கொல்லப்பட்ட வழக்கு... அனைத்து கொலையாளிகளும் கைது- திருப்பூர் எஸ்.பி. பேட்டி

0 9874

பல்லடம் அருகே 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முன்விரோதமே காரணம் என்றும், அந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து 4 கொலையாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பல்லடம் காவல் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொலை வழக்கில் கைதான குட்டி என்று அழைக்கப்படும் வெங்கடேஷ் ராஜ்குமார், போலீசாரின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, சிறிய அளவில் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

கடந்த 3ஆம் தேதி தேதி நடைபெற்ற நால்வர் படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்தநாளே செல்லமுத்து என்பவன் கைது செய்யப்பட்டதாகவும், எஞ்சிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் திருப்பூர் எஸ்.பி. தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments